.

ஆலன்&பார்பரா பீஸ் எழுதிய ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்& பெண்கள் அழுகிறார்கள் என்ற புத்தகமானது ஆண் பெண் உளவியலைப் பற்றியும் பாலினங்களிற்கிடையிலுள்ள இடைவெளியை தவறாகப் புரிந்து கொள்ளல் மற்றும் முரண்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது.புத்திசாலித்தனம் மிக்க சுவராஸ்யமான படைப்பு இந்தப் புத்தகமாகும்.

எதிர்ப்பாலினத்தவரினைப் போலவே நானும் சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் வேண்டுமா என்று மக்கள் யோசிக்கிறார்கள்.நிச்சயமாக அப்படிக் கிடையாது.நீங்கள் ஒரு தொலைபேசியை வாங்கும் போது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கும் ஒரு கையேட்டுடன் அது உங்களிடம் கிடைக்கிறது.உங்களது தொலைபேசி வேலை செய்கிறது என்று நீங்கள் கற்றுக் கொண்டு நீங்கள் விரும்புவதைச் செய்யுமாறு அதனை மாற்றியமைக்கும் போது அது உங்களிற்கு நிறைய சந்தோசத்தைக் கொடுக்கும்.உங்களிற்கு விளக்க கையேட்டைக் கொடுத்தார்கள் என்பதால் தொலைபேசி நிறுவனம் உங்களை ஒரு தொலைபேசி வல்லுனராக மாற்ற முயல்கிறது என்று நீங்கள் அந் நிறுவனத்தைக் குறை சொல்ல மாட்டீர்கள்.அதைப் போலவே இந்தப் புத்தகமானது எதிர்ப்பாலினத்தவரைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடனான நடவடிக்கைகளில் சிறப்பான விளைவுகளைப் பெறவும் உங்களிற்கு உதவும் ஒரு விளக்க கையேடு ஆகும்.

புத்தகம் இவ்வாறு தொடங்குகிறது:நாம் நிர்வாணமாகவும், ஈரமாகவும், பசியாகவும் பிறக்கிறோம்.பின்னர் விஷயங்கள் மோசமாகிவிடும்.நான் அறிமுகத்தை முடித்தவுடன்,ஆலன் மற்றும் பார்பராவால் நிறைவேற்றப்பட்ட யோசனைகள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில்  மூழ்க வேண்டியேற்பட் டது.நான் இந்தப் புத்தகத்தை மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக உணர்ந்தேன், கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளுடனும் என்னால் தொடர்புபடுத்த முடிந்தது.

ஆண்கள் ஏன் பிற பெண்களை வெறித்துப் பார்க்கிறார்கள்,நான் எவ்வாறு சிந்திக்க வேண்டும் எவ்வாறு என்ன செய்ய வேண்டும் என்று ஏன் எனக்கு விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு பெண் யோசிக்க கூடும் இந்த வினாக்களிற்கான விடைகளை இந்தப் புத்தகத்தில் அலசுகிறார்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸ்.இதைப்போல பெண்கள் ஏன் ஒருபோதும் விடயத்திற்கு வராமல் தொடர்ந்து பேசுகிறனர்..?ஏன் அவர்கள் இடைவிடாமல் நச்சரிக்கிறனர் என ஒரு ஆண் நினைத்திருக்க கூடும் இந்தக் கேள்விகளிற்கும் விடை இந்தப் புத்தகத்தில் உள்ளது.

பெண்கள் ஏன் இவ்ளவு அதிகமாகப் பேசுகிறார்கள்,அதுவும் பெரும்பாலும் நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்,தம்மைச் சுற்றிலும் உள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் நுணுக்கமான விவரங்களைக் கூட விளக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் மற்றும் வெகு அபூர்வமாகவே உடலுறவைத் தாங்களாகவே முன்வந்து தொடங்குவதில்லை போன்ற விடயங்கள் விஞ்ஞான ரீதியாக இன்று விளக்குவது சாத்தியமே. ஆண்களால் ஏன் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய முடிகிறது அவர்கள் ஏன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதை வெறுக்கிறார்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை,நண்பர்களுடன் முழுதாக ஒரு வார இறுதியை செலவிட்ட போதிலும் அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் போன்ற விடயங்களிற்கு பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் ரீதியான காரணங்கள் உள்ளன என்பதை அறிவோம்.

பல்வேறு வழிகளில் பெரும்பாலான மனிதர்கள் கவனிக்கத் தவறிவிடுகிற தெளிவான விடயங்களை இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.அழகிய வேலைப்பாடுகள் அமைந்த குசன்களை நுணுக்கமாகக் கவனித்துப் பார்ப்பதிலும் அவற்றை விரும்பி வாங்குவதிலும் ஆண்கள் நள்ளிரவில் இரகசியமாக வீட்டுக்குள் நுழையும் போது அவர்கள் தடுக்கி விழுமாறு சோபா நாற்காலிகளை இடம்மாற்றி வைப்பதிலும் பல பெண்களிற்கு உயிரியல் ரீதியான ஆர்வம் இருப்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது ஒரே விளையாட்டின் மறு ஒளிபரப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஏன் வெகு சில பெண்களே புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் அதே போல ஆடை விற்பனையின் தள்ளுபடி பகுதியில் ஒரு அற்புதமான நவீன ரக உடையைக் கண்டு பிடிப்பது என்பதை வாழ்க்கையின் பிரதான சிறப்பம்சங்களில் ஒன்றாக அண்கள் கருதுவது வெகு அபூர்வம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க கூடும் இதற்கான காரணங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஏன் பெண்கள் அழுகிறார்கள் என்பது பெண்கள் அல்லது சிறுமிகளுடன் தொடர்பு கொண்ட அனைத்து ஆண்களும் அவசியம் படிக்க வேண்டும். விதிகளை வளைக்கவும்,தங்களுக்குச் சாதகமாக விஷயங்களைச் செய்யவும் பெண்கள் தங்கள் கண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி இது பேசுகிறது.அதாவது ஆண்கள் மட்டும் பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் அல்ல பெண்களும் பொய் சொல்கிறார்கள்.அதாவது இருவருமே சம அளவுகளில் பொய் சொல்கிறார்கள் ஆனால் ஆண்கள் அடிக்கடி பிடிபடுகிறனர் பெண்கள் மாட்டிக் கொள்வதில்லை என்பதே வித்தியாசம்.


ஒரு ஆண் என்ன செய்கிறான் என்பதைக் கண்காணிக்க பெண்களுக்கு ரகசிய மதிப்பெண் முறை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா..?ஒரு ஆண் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவள் ஒரு புள்ளி தருகிறாள்.இது வெளிப்படையாக சமநிலையை பராமரிக்க உதவுகிறது.இந்தப் புத்தகத்தின் நான்காவது அத்தியாயம் இதைப் பற்றி துல்லியமாக விளக்கு கிறது.வெளிப்படையாக,ஆண்கள் ஒரு பணியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுகிறார்கள்,அதேசமயம் ஒரு பெண் ஒரு செயலுக்கு அல்லது பரிசுக்கு அதன் அளவைப் பொருட்படுத்தாமல் புள்ளிகளை ஒதுக்குகிறார்.பேனா மற்றும் காகிதத்தை எடுத்துக்கொண்டு முடிவுகளை செய்து பார்க்கவும். புத்தகத்தின் படி:பெண்கள் புள்ளிகளைச் சேமித்து வைக்கிறார்கள்,மறக்க மாட்டார்கள்,எடுத்துக்காட்டாக: ஒரு ஆண் பூக்கள் மற்றும்  வைன் வாங்குவது 10 புள்ளிகளுக்குச் சமமானதாகக் கருதும் அதேசமயம் ஒரு பெண் 3 புள்ளிகளை மட்டுமே தருவாள்,ஒரு பெண்ணின் சமையலைப் பாராட்டுவது பெண்ணிடத்தில் நன்மதிப்பை மிகவும் உயர்த்தும் என்று கூறுகிறது.

ஆண்களுக்கான குறிப்பு:மலர் கொண்டு வருவது,அவளது தோற்றத்தைப் பாராட்டுவது,தனது பொருட்களைச் சரியான இடத்தில் வைப்பது,பாத்திரம் கழுவ உதவுதல் போன்றவை நல்ல புள்ளிகளைப் பெற்றுத்தரும் என்பதை நினைவில் கொள்ளவும்.அதாவது சிறிய செயல்களைச் செய்ய அவன் முயற்சித்தால் அவனது வாழ்க்கைத் தரம் வெகுவாக முன்னேறும் மேம்படும்.

பாலியல் சோதனைகள் தொடர்பாக இரண்டு அத்தியாயங்கள் தரப்பட்டுள்ளன.பெண்களுக்கான பாலினக் கவர்ச்சிப் பரிசோதனை மற்றும் ஆண்களிற்கான பாலினக்கவர்ச்சிப் பரியசோதனை என்பனவாகும்.ஒரு ஆண் முதன் முதலில் ஒரு பெண்ணைக் கவனிக்கும்போது அவன் மனதில் தோன்றும் முதல் பதிவு என்ன..?தாங்கள் ஆண்களின் பார்வையில் எவ்வளவு கவர்ச்சியாக இருக்க விரும்புகிறோம் என்பதை பெண்கள் அறிந்து கொள்ள இந்த அத்தியாயங்கள் உதவும்.கவர்ச்சிப் போட்டியில் பெண்களிடம் ஒரு ஆண் என்ன மதிப்பெண் பெறுகிறான் பெண்கள் ஆண்களை விருப்பத்துடன் விரும்பு கிறார்களா..?அல்லது வெறுப்புடனா..?என்பதைத் தெரிந்து கொள்ள இந்த அத்தியாயங்கள் ஆணிற்கு உதவக் கூடும்.

எதிர்பாலினத்தவருடன் வாழ்வதில் வேலை செய்வதில் அவர்களை நிர்வகிப்பதில் மற்றும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதில் பெரும்பலான சமயங்களில் உங்களால் சரியாகச் செயற்பட முடிந்தால் உங்கள் வாழ்க்கை எவ்வளவோ மகிழ்ச்சிகரமாக இருக்கும்.துரதிஸ்டவசமாக நம்மில் பலரும் பல சமயங்களில் இதைச் சரியாகச் செய்ய முடியாத நிலையில்தான் இருக்கிறோம்.இதனை மேம்படுத்த நீங்கள் எதிர் பாலினத்தவருடன்  வெற்றிகரமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால் உங்களிற்கு இரண்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.ஆண் மொழி மற்றும் பெண் மொழி.இதுவும் கூட எம் உறவுகளை மேம்படுத்த குடும்பச் சிக்கல்களைத் தீர்க்க நிச்சயம் உதவும்.அதற்காக நாம் கற்றுக் கொள்ள தயாராக இருத்தல் வேண்டும்.

இந்தப் புத்தகமானது உங்கள் வாழ்விலிருந்து துயரம் மன உளைச்சல் மற்றும் குழப்பத்தில் ஏதோ சிறிதளவையேனம் விலக்கி விடுவதற்கான கொஞ்ச வாய்ப்பையாவது தருகிறது.சாதாரண பொது அறிவுடன் மிகவும் சக்தி வாய்ந்தவையான அறிவியல் உண்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

நான் கற்றுக்கொண்ட பாடங்கள்:

  • ஒரு பெண்ணிடம் பொய் சொல்லாதே (அவளிடம் பொய்களைக் கண்டறிய 5 உணரிகள் உள்ளன, ஒரு ஆணுக்கு 3 மட்டுமே உள்ளது).
  • முதல் நாளிலிருந்தே உறவில் உங்கள் பங்கு பற்றி தெளிவாக இருங்கள்.
  • ஒரு பெண் பல பணிகளைச் செய்ய முடியும், எனவே தொலைபேசியில் பேசுதல்,நகத்திற்கு வர்ணம் தீட்டுதல், குழந்தையைப் பார்த்துக் கொள்வது, சமைத்தல் மற்றும் அடுத்த அறையில் கணவனைக் கேட்பது - எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் வித்தை காட்டுவதில் வல்லவள்.
  • மூளையின் இடஞ்சார்ந்த பகுதியுடன் ஆண்கள் சிறந்தவர்கள். நாங்கள் நல்ல வேட்டைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள்.
  • பெண்கள் கெட்ட பையன்களை விரும்புகிறார்கள்.
  • 'நான் உள் அழகை மட்டுமே நம்புகிறேன்' என்று சொல்லும் ஒரு மனிதன், ஓரின சேர்க்கையாளர் அல்லது பொய் சொல்லலாம்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்றால் - திட்டமிடத் தொடங்குங்கள் (கடற்கரையில் சோம்பேறித்தனமாக நீங்கள் வாழ முடியாது).
  • பெண்கள் சிறிய முயற்சிகளை விரும்புகிறார்கள் மற்றும் பாராட்டுகளைப் பாராட்டுகிறார்கள் - எப்போதும்.
  • ஒரு பெண் பேசும் போது வாயை மூடிக்கொண்டு கேளுங்கள் - அது அவளுக்கு நன்றாக இருக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தகமானது நீங்கள் இதுவரை சாதாரணமாக நினைத்துக் கடந்து சென்ற பல விடயங்களிற்குப் பொருள் இருப்பதை உணர்த்தும் மற்றும் உங்கள் உறவுகளை மேம்படுத்தும்.அதனை விட ஆண்கள் ஏன் காதலைப் பற்றி மிகவும் குழப்பமடைகிறார்கள்?,உறவுகளில் உறுதியாக ஒன்றைச் சொல்ல ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்,ஏன் பெண்கள் நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என ஆண்கள் உணருகிறார்கள்,ஏன் பெண்கள் சுற்றி வளைத்தே பேசுகிறார்கள்,ஏன் ஆண்கள் குதிக்கால் உயர்ந்த செருப்புக்களை போட்ட பெண்களை விரும்பகிறார்கள்,ஏன் பெண்கள் அழுகிறார்கள்,ஆண்களின் கவர்ச்சி எது,பெண்களின் கவர்ச்சி எது, ஆண்களைப் பற்றிய ஏழு புதிர்கள் என இவ்வாறான அனைத்துக் கேள்விகளி ற்கும் விடையளிக்கிறது.வாசிப்போம்.

.

Post a Comment

Previous Post Next Post