.

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் தல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக்கொண்டே இருப்பார்.தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.

ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார்.இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்துகொண்டிருந்தார்.அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார். தன்னிடமிருந்த பண முடிப்பை அவசர அவசரமாக அவர் கையில் திணித்துவிட்டு திரும்பி வந்து விட்டார்


அப்பாடா ஒரு வழியாக தர்மம் செய்தாகிவிட்டது என்கின்ற மகிழ்ச்சி.மனநிறைவு அவர் முகத்தில்...நிம்மதியாக தூங்கி எழும்பினார்.மறு நாள் காலையில் ஊர் பூராகவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தைக் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.இதைக் கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கா உதவி செய்தோம். பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார்.

எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தைக்  கொடுத்துவிட்டுப் போனார்.மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேற்று ராத்திரி விபசாரப் பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்துவிட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும். இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.

மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தைக் கொடுத்தார்.மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தைக் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டு படுத்து தூங்கினார்.

அன்று இரவு ஒரு கனவு.அந்தக் கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை.உன்னிடம் பணம் வாங்கிய அந்தத் திருடன் திருந்திவிட்டான். அந்தப் பெண்ணும் திருந்திவிட்டாள்.செல்வந்தனும் கொடையாளி விட்டான் என்று கடவுள் சொன்னார்.

அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால்,அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தர்மம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்த்தது.



Post a Comment

Previous Post Next Post