.

ஒரு பென்குயின் அரிசி மூட்டையைத் தூக்கி நிறுத்தி வைத்தது போல இருக்கும் பறவை.பறவையினத்தை சார்ந்த இந்த பென்குயின் பறவைகளால் பறக்கமுடியாது.

மிகவும் கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகவும் சாதுவா னவை.பனிப்பாறைகள் நிறைந்த,துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வாழும். அவுஸ்திரேலியா,ஆபிரிக்கா,தென் அமெரிக்கா, பெரு,நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், அண்டார்டிகா,பசிபிக் கடற்கரைகள் தான் பென்குயின்கள் வாழும் இடங்கள்.

பெரிய பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும். தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இவை நல்ல தண்ணீரைக் குடிக்காது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

பென்குயின் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது முகமூடி போட்ட மனிதன் போல இருக்கும்.இதற்கு குட்டை கழுத்து,கனத்த உடம்பு.வால் கொஞ்சம் மட்டும் உண்டு.இதன் உடல் முழுவதும் தண்ணீர் புகாத வோட்டர் புரூப் (Water Proof) சிறகுகள் உள்ளன. கடும் குளிரையும், மழையையும் சமாளி க்க மூன்று அடுக்குச் சிறகுகள்!!!இதன் உடம்பில் இருக்கும்.

பென்குயின் உடம்பில் தினசரி 150 கிராம் சிறகுகள் வரை உதிர்ந்து விடும். ஆனால்,12 நாட்களில் புதுச் சிறகுகள் முளைத்து விடும்.தன் உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு,கடும் குளிரை இதமாக சமாளித்து விடும் பென்குயின்.

இதற்கு பிடித்த உணவு கடல்மீன்கள்தான். கடலில் வெகு ஆழத்துக்குச் சென்று டைவ் அடித்து விதம்விதமான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து சாப்பிடும். கடலில் 200 மீட்டருக்குக் கீழ் சர்வ சாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும்.

ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால்,காலால் இவை நடக்காது. வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங் செய்யும்.பென்குயின்கள் நிலத்தில் எதையும் சாப்பிடாது.எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் பல நாட்களாக கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.

அதிகம் நேரம் நீரிலேயே பென்குயின்கள் இருப்பதால் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது.எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். இந்த தோற் றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு,நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும்.தனது ஜோடியைத்தவிர பிற பென்குயின்களை ஒரு போதும் ஆண் பென்குயின் நாடுவதில்லை.


மாலை நேரம் வந்து விட்டால் பென்குயின்களுக்கு சந்தோஷம் பிறந்து விடும். இணைவு முடியும் வரை டிரம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டு பென்குயின்களும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணைவு நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து,மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் முகத்தைத் திரும்பிக்கொள்ளுமாம். டிரம்பெட் இசை, இறக்கைகள் படபட வென அடிக்கும் சத்தம் இரண்டும் நின்றுவிட்டால் இணைவு முடிந்துவிட்டது என அர்த்தம்.

வயிற்றில் முட்டை உருவாகிய பின்,கடற்கரையில் புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் முட்டையிடுவதற்கு கூடும். இளம் பச்சை அல்லது வெள்ளை நிற முட்டைகள் இடும்...30 முதல் 60 நாட்கள் வரை அடைகாத்தல் நடக்கும்.கணவனுக்கும் இதில் பங்குண்டு. இரண்டும் பாதி பாதி நாட்கள் அட்டவணை முறையில் அடைகாக்கும்.அந்த நாட்கள் முழுவதும் அன்ன ஆகாரம் சாப்பிடாது.பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந் தால்,பென்குயின் தனது பாதச்சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடி அன்ன நடை நடந்து இடம் பெயரும். பென்குயின்களை பார்க்க சிட்னி கடற்கரை யில் இன்றும் நிறைய உல்லாசப்பயணிகள் குவிகிறார்கள். 





Post a Comment

Previous Post Next Post