நரியாருக்கு அன்று ஒரே சந்தோசம்,அருமையான முயல் குட்டி ஒன்று கிடைத் திருக்கிறது. அப்படியே கவ்விக்கொண்டு போய் தன்னுடைய குகையில் வைத்து விட்டது. இப்பொழுது பசியில்லை, என்றாலும், கிடைத்த இரையை விடவும் மனமில்லை. அதுவும், முயல் குட்டியாக வந்து நரியாரிடம் மாட்டிக்கொண்டது.
குரங்கு ஒன்று மரத்தில் இருந்து கீழே பார்க்க, முயல் ஒன்று கண்ணீரும் கம்பலையுமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தது. என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள மரத்தை விட்டு இறங்கியது.
என்ன நண்பா? ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்? கேட்டவுடம் முயல் கேவி கேவி அழுது கொண்டு என் பிள்ளையை காணவில்லை. இங்குதான் விளையாண்டு கொண்டிருந்தான். நான் இரை தேட போய் வருவதற்குள் இவனை காணவில்லை. எல்ல இடங்களிலும் தேடி விட்டேன், என்ன செய்வது என்று தெரியவில்லை.
முயலின் அழுகையை கேட்டதும்,குரங்கு சிறிது யோசித்து கேட்டது. உன் பையன் எங்கு விளையாண்டு கொண்டிருந்ததாக சொன்னாய்?
அதோ அந்த மரத்துக்கு பக்கத்தில்தான் விளையாண்டு கொண்டிருந்தான். எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும், சொல்ல சொல்ல அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
அழுகாதே சற்று பொறு என் நண்பர்களை கேட்டு பார்க்கிறேன், எப்படியும் என் நண்பர்கள் அந்த மரத்தின் மேல் இருந்திருப்பார்கள், அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. வா என்ன நடந்திருக்கும் என்று கேட்டுப்பார்க்கலாம்.
முயலை அழைத்துக்கொண்டு அந்த மரத்தடிக்கு வந்தது. மரத்தின் மேல் இருந்த நண்பர்களை அழைக்க அவர்கள் அனைவரும் கீழே வந்து என்னவென்று விசாரித்தன.
முயலிடம் இங்கு ஒரு முயல் குட்டி விளையாண்டு கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். சற்று தள்ளி ஒரு நரியார் தூங்கிக்கொண்டிருந்தார், அதையும் பார்த்தோம்.முயல் குட்டி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததால், ஒரு வேளை நரியாரிடம் மாட்டியிருக்கலாம். சொன்னவுடன் ஓ..என்று அழ ஆரம்பித்து விட்டது முயல்.
முயலை அழைத்து வந்த குரங்கு,பொறு அவசர்ப்படாதே, முதலில் நரி எங்கு போயிருக்கும் என்று தேடிப்பார்க்கலாம். எனக்கு தெரிந்து அரை மைல் தூரத் தில் ஒரு நரி இருப்பது தெரியும். அநேகமாக அங்குதான் இருக்கும், போய் பார்க்கலாம், முயலை அழைத்துக்கொண்டு அந்த இடம் சென்றது.
சத்தமில்லாமல் இரண்டும் குகைக்குள் எட்டி பார்க்க நரியார் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்க சற்று தொலைவில் முயல் குட்டி திரு திருவென விழித்தபடி முகத்தில் பயத்துடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தன.
அப்பாடி என் மகன் உயிரோடு இருக்கிறான், ஆனால் எப்படி அவனை தப்பிக்க வைப்பது இரண்டும் யோசித்தன.
Post a Comment