ஒரு நரி அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்குச் சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் தெரிந்தது. நரிக்கோ குதுகலமாயிற்று. நான் பெரிய ஆள் போல.அதுவும் இந்தக் காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல என நினைத்துக்கொண்டே வேட்டைக்குச் சென்றது.
செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தைக் கண்டது. சிங்கமோ அது சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்டக் களைப்பில் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தது. நரியும் தான் மிகப் பெரியவன் என நினைத்துக்கொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்துசென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் தன்னைக் கண்டு பயந்து சென்றது என நினைத்துக்கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட் டிற்குச் சென்றது.மாலை தன் குகைக்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது.
அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும் இனிமேல் நான் தான் இந்த காட்டிற்கு ராஜா என்று கூறியது. யானையோ, இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்ததைக் கூறி சிங்கமே என்னைப் பார்த்து பயந்தது என்றது. கூட்டத்தில் இருந்த மானோ சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல், பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம் என்றது.
Post a Comment