.

ஆழ்மனத்தின் அற்புத சக்தி என்னும் விற்பனைச் சாதனை கொண்ட புத்தகத்தை எழுதிய "ஜோசப் மர்பியின்" மற்றுமோர் படைப்பு தொலையுணர்வு புத்தகமாகும் உங்கள் அழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்க ங்களும் இப்புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நூலின் ஆசிரியரான மர்பி உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.அவர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கிழக்கத்திய மதங்களை படிப்பதில் செலவிட்டார்.பல வருடங்கள் இந்தியால் கூட தங்கியிருக்கிறார்.உலக மதங்களை ஆராய்ச்சி செய்த பிறகே நம் எல்லோருக்கும் பின்னும் ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை மர்பி கண்டு கொண்டார்.அது எம் ஆழ் மனதின் அளப்பரிய சக்திதான் அது.மர்பி தன் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்புக் கேட்ட பேதெல்லாம் தன் வாழ்க்கை தன்னுடைய புத்தகங்களில் புதைந்து கிடக்கிறது என்கிறார்.30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிரந்தாலும் ஆழ்மனதின் அற்புத சக்தி என்ற நூல் பிரபலமானதாகும்.

தங்களுடைய தொலையுணர்வு சக்தியைக் கொண்டு பயனடைந்துள்ள பலருடைய உண்மைக் கதைகள் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெற்றுள்ளன. அவை உங்களுக்குக் கண்டிப்பாக ஊக்கமளிக்கும்.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருத்தமான தீர்வுகளைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு முடிவில்லாப் பேரறிவு உங்கள் ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ளது. எளிய நடைமுறைக்கு சாத்தியமான வழிகளின் மூலம் அந்தப் பேரறிவைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்திக் கொள்ள இந்நூல் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

இந்நூலானது 1973ம் ஆண்டு ஜோசப் மர்பியினால் வெளியிடப்பட்டாலும் 2015 ம் ஆண்டே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மஞ்சள் பிரசுரத்தால் வெளியிடப் பட்டுள்ளது.இதற்கு முன்னரே வெளியிடப்பட்டிருந்தால் நிச்சயம் தமிழ் வாசகர்களிற்கு உதவியிருக்கும்.2015 இல் வெளியிடப்பட்டாலும் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய எளிய நடைமுறைகளே இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

ஆழ்மனதின் விதிகளைப் பயன்படுத்துதுவதன் மூலம் தங்களுடைய ஆசைகளையும் தேவைகளையும் மக்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் அதனை உடனடியாகவே செய்ய முடியும் என்கிறது இந்நூல்.இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உத்திகளை உங்கள் வாழ்வில் செயற்படுத்தினால் நிச்சயம் உங்களால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்று உத்தரவாதம் தருகிறது இந்நூல் அதற்குரிய ஆதாரமாக ஏராளனமான கதைகள் இப்புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ளன வாசகர்கள் அவற்றைப் சரியான விதத்தில் உணர்ந்து நடைமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிறார் மர்பி.

அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் சோதனைகளையும் எதிர் கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்ந புத்தகம் வாசகர்களிற்கு கற்றுக் கொடுக்கிறது.மனித மனதினுள் அடங்கியிருக்கிற அசாதாரண சக்தியை உடனடியாக முடுக்கி விடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை சொல்லியிருக்கிறார் மர்பி.வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்ற விரும்புகிற கனவுகளையும் இலட்சியங்களையும் கொண்ட செயலாளர்கள்,விற்பனையாளர்கள்,கடை ஊழியர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள்,குடும்பத் தலைவிகள் என பலரையும் மனதில் வைத்துத்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீங்கள் செயற் படுத்த வேண்டிய உத்திகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுமே இடம் பெற்றுள்ளன.உண்மையான பதில்களைத் தெரிந்து வைத்திருக்கிற ஒரு முடிவி ல்லாப் பேரறிவு உங்கள் மனதில் குடிகொண்டுள்ளது என்கிறார் மர்பி.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில கதைகளைச் சுட்டிக் காட்டலாம் அவையாவன தன் படிப்பில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன் முடிவில்லாப் பேரறிவின் உதவியுடன் எப்படி வெற்றியாளராக மாறினான் என்பது பற்றிய கதை,மனைவி தன்னுடைய தொலையுணர்வைப் பயன்படுத்தி தன் கணவனின் உயிரைக் காப்பாற்றியது,போதைப் பொருட்களைக் கண்டு பிடிக்க தொலையுணர்வு எவ்வாறு துப்பறிவாளருக்கு உதவியது,தன்னுடைய வீழ்ச்சிக்குக் காத்திருந்ததாகத் தான் நம்பிய நான்கு நபர்கள் பற்றி தனக்கு இருந்த பயத்தை முடிவில்லாப் பேரறிவுடன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலமாகக் களைந்து இப்போது மன அமைதியுடன் இருக்கிற ஒரு பெண்ணின் கதை,இறந்து போய் விட்ட தன் தந்தை விட்டுச் சென்ற உயில் காணாமல் போன நிலையில் ஓர் இளம் செயலாளர்,தொலையுணர்வின் சக்தியால் எவ்வாறு அதனைக் கண்டு பிடித்தார் என்பது பற்றிய கதை,தொலையுணர்வு எவ்வாறு ஒரு தற்கொலையைத் தடுத்தது என்பது பற்றிய கதை,தொலைந்து போன வைர மோதிரத்தை தொலையு ணர்வைப் பயன்படுத்தழ கண்டுபிடித்தது பற்றிய கதை என ஏராளமான கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன அவற்றை விரிவாக நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குள் இருக்கும் முடிவில்லா இருத்தலையும் சக்தியையும் தொடர்பு கொள்ளுங்கள்.அவற்றோடு உங்களை இசைவு படுத்திக் கொள்ளுங்கள். தொலையுணர்வு என்பது உங்களுடைய ஆழமான விருப்பங்களை நிறைவேற்றுவ தற்காக இயங்குகிற ஓர் எளிய நடைமுறைச் சாத்தியம் கொண்ட அறிவு பூர்வமான வழிமுறையாகும்.

இந்தப் புத்தகத்தை சரியான முறையில் பயன் படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியான வெற்றிகரமான வாழ்க்கையை ஒவ்வொருவரும் அனுபவிக்க முடியும் என்று உறுதி கூறுகிறார் மர்பி.வாசிப்போம்.

தொலையுணர்வு புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.








You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post