.

ஜெப் கெல்லர் எழுதிய எல்லாமே மனப்போக்குத்தான்(Attitude is Everything) என்ற நூலானது எமது வாழ்க்கையை மாற்ற உதவும் சிந்தனைகளைச் சொல்லித் தருகிறது. மனப்போக்கை மாற்றுங்கள்.வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற சுலோகத்துடன் வெளிவந்திருக்கும் இந் நூலானது எங்களது எதிர்மறை எண்ணங்களை களையுங்கள்.உங்கள் மீதே நம்பிக்கை வையுங்கள் என்ற கருத்தை எடுத்துரைக்கிறது.

இந் நூலாசிரியரான ஜெப் கெல்லர் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர்.பின்னாளில் அவர் ஊக்குவிப்புச் பேச்சாளராக மாறிப் போகிறார்.இடையில் அதற்காக 4 வருடங்கள் நிறைய புத்தகங்கள் குறிப்புக்களை சேகரித்து தன்னுடைய அனுபவத்தின் மூலம் பேச்சாளராக மாறியிருக்கிறார் கெல்லர்.

நாம் அனைனவரும் துன்பங்களை வெறுக்கிறோம்.அவை எமக்கு உதவி செய்வதில்லை என்று கூறுகிறோம்.ஆனால் கெல்லர் துன்பங்கள் எமக்கு உதவுகிறன என்று கூறுகிறார்.அவை எப்படி எமக்கு உதவுகிறன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.உதாரணமாக துன்பங்கள் நமக்குபட புதிய கண் ணோட்டத்தை கொடுக்கிறன,நன்றியுணர்வைக் கொடுக்கிறன, மறைந் திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறன,மாற்றங்களைச் சுவீகரிக்கிறன, மதிப்பு வாய்ந்த படிப்பினைகளைத் தருகிறன,சுயமதிப்பை வளர்க்கிறன என்று துன்பங்களைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி யுள்ளார் கெல்லர்.

நீங்கள் எவ்வளவு நேர்மறையாளராக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு எதிர்மறையாளராக இருந்தாலும் சரி இப்புத்தகத்தால் உங்களுக்கு உதவ முடியும்.எதிர்மறையாளர் எனில் நேர் மறையான மனப்போக்கை வளர்த்துக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கையில் நம்புவதற்கரிய முன்னேற்றங்களை அடையவும் இந்நூலைப் பயன்படுத்தலாம்.ஏற்கனவே நேர்மறையாள ராக இருக்கும் பட்சத்தில் இன்னும் மேலான வெற்றியையும் மன நிறைவையும் அடைய இந் நூல் உதவி செய்யும்.

இந்தப் புத்தகமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொர பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.ஏதாவது தேவை யென்றால் வாசகர்கள் அந்தப் பகுதியை மட்டுமே படித்து தெரிந்து கொள்ள முடியும்.

மனதில்தான் வெற்றி தொடங்குகிறது என்ற முதலாம் பகுதி மனப்போக்கின் ஆற்றலும் உங்களுடைய நம்பிக்கையும் எதிர்காலத்தை எவ்வாறு வடிவ மைக்கும் என்பதைச் சொல்கிறது.தனிமனித வெற்றி என்பது நீங்கள் யோசிக்கும் செயன்முறையைச் சார்ந்துள்ளது என்பதை இப்பகுதி விளக்குகிறது.

கவனமாகப் பேசுங்கள் என்ற இரண்டாம் பகுதி நீங்கள் பேசுகின்ற விதத்தின் மீது கவனத்தைக் குவிக்கிறது.உங்களுடைய மனப்போக்கு எவ்வாறு உங்களுடைய வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது என்பதையும் நேர்மறையான வார்த்தைகள் உங்களுடைய இலக்குகளை எவ்வாறு உந்தித் தள்ளும் என்பதையும் இதில்  குறிப்பிட்டுள்ளார் கெல்லர்.

செயலில் இறங்குபவர்களிற்கு பிரபஞ்சம் உதவுகிறது என்ற மூன்றாம் பகுதி நீங்கள் நேர்மறையாகச் சிந்தித்தாலும் நேர்மறையாகப் பேசினாலும் செயலில் இறங்காவிட்டால் உங்களால் கனவை நனவாக்க முடியாது என்பதை எடுத்துiரைக்கிறார் கெல்லர்.நீங்கள் கால் மேல் கால் போட்டு இருந்து கொண்டு,வெற்றி தேவதை தானாகவே வந்து உங்கள் முன் மண்டியிடுவாள் என்று எதிர்பார்க்க இயலாது உங்களுடைய கனவை நனவாக்க தேவையான செயல் நடவடிக்கைகளளை பற்றி இப்பகுதியிலுள்ள பாடங்கள் விளக்கும்.

மனப்போக்கைப் பற்றி கெல்லர் விளக்கியுள்ள விதம் பாராட்டிற்குரியது.அதனை பின்வருமாறு கூறுகிறார்.எதிர்மறை மனப்போக்குடன் இருக்கும் நபர் என்னால் முடியாது என்று சிந்திக்கிறார். நேர்மறை மனப்போக்குடன் இருக்கும் நபர் என்னால் முடியும் என்று சிந்திக்கிறார்.எதிர்மறை மனப்போக்குடன் இருக்கும் நபர் பிரச்சனைகளில் உழல்கிறார்.நேர்மறை மனப் போக்குடன் இருக்கும் நபர் தீர்வுகள்மீது தன் கவனத்தைக் குவிக்கிறார்.இவ்வாறு அனேக உதாரணங்கங்களை இப்புத்தகத்தில் கெல்லர் கூறியுள்ளார்.அதனை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மக்களிடம் பெரும்பாலும் காணப்படும் பயங்களைப் பற்றி இந் நூல் எடுத்துரைக்கிறது.பெரும்பாலான பயங்களில் முதலிடம் வகிப்பது பலர் முன்னிலையில் பேசுதலாகும் ஏனையவை தங்களின் கருத்துக்கள் அல்லது யோசனைகள் நிராகரிக்கப்படுவதைக் கேட்டல்,சொந்த தொழிலைத் தொடங்குதல்,தோல்வி குறித்த பயம்,உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் பேசுதல் என்பனவாகும்.இதனை உதாரணங்களுடன் விளக்குகிறது இப் புத்தகம்.இந்தப் பயங்கள் எதாவது உங்களிற்கு இருந்தால் கவலைப் படாதீர்கள்.நீங்கள் அவற்றை வெல்லும் திறமை படைத்தவர் என்றும் அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்று நம்பிக்கையளிக்கிறார்.

நேர்மறை மனப்போக்குடன் செயற்படுவதற்கு இந்தப் புத்தகமானது உண்மையில் துணை புரிகிறது.பயனடைந்தவர்களின் கதைகளையும் ஒருங்கிணைக்கிறது இப் புத்தகம்.சுருக்கமாகச் சொன்னால் எண்ணம் போல் வாழ்க்கை என்று வாழ்வதற்கும். எண்ணங்களின் மூலமாக வெற்றிகளை அடைவதற்கும் கெல்லரின் இப் புத்தகம் உங்களுக்கு உதவக் கூடும்.

உங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உதவி செய்கிறது.புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளை இந் நூல் கொண்டுள்ளது.உங்களுக்குத் தேவையான போதெல்லாம் உங்களுடைய மனப்போக்கையும் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான ஒரு கையேடே இப் புத்தகம்.வாசிப்போம்.





Post a Comment

Previous Post Next Post