.

‘போதை’ என்ற சொல்லும் 'போதைப் பொருள்' என்ற சொல்லும் உலகத்துக்கோ எமது நாட்டுக்கோ புதியதொன்றல்ல.ஆனால்,இன்று இந்த சொல் அதிகளவில் தமிழர்கள் மத்தியில் உலாவர தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள்,போதைக்கு அடிமையாதல் போன்ற சம்பவங்கள் அண் மைக்காலமாக அதிகரித்துவருவதே ஆகும். இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான வரலாற்றையும் அதனால் பாதிக்கப்படுவோர் எதிர்கொள்ளும் சவால்களும் அதிலிருந்து மீள்வதற்கு காணப்படும் வழிகள் தொடர்பிலும் இந்த கட்டுரை ஆராய்கிறது.

ஒவ்வொரு வகை போதைப் பொருளும் ஒவ் வொரு வகையான செயற்பாடுகளை மூளையிலும் நரம்புத் தொகுதியிலும் ஏனைய உடற் பாகங்களிலும் செயற்படுத்துகின்றது-ஆக்கிரமிக்கிறது- அடிமையாக்குகிறது-நோயாளி ஆக்குகிறது-பலி ஆக்குகிறது . ஓபியாய்டுகள் என்றவகை வலி கொல்லி மருந்துகளை போதைக்காக பயன்படுத்துபவர்கள், அதற்கு அடிமையானவர்களின் பொதுத்தன்மை பற்றி இப்போது நோக்குவோம் .

இது மிகப் பிரபலமானதும் மிகவும் ஆபத்தான தன்மை உடையதுமாகிய ஹெரோயின் வகையாகும்.ஓபியாய்டுகளில் ஹெரோயின், ஓபியம், மார்பின், கோடீன், ஃபெண்டானில் என்பன அடங்குகிறது. ஃபெண்டானில் எனப்படும் வலி நிவாரணி மார்பினை விட 50 தொடக்கம் 100 மடங்கு ஆற்றல்மிக்கது.இது மற்றவை போல் அல்லாது ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்படுவதொன்றாகும் .

முன்னொரு காலத்தில் கல்வி,கல்விசார் செயற்பாடுகள்.கல்விசார் ஒன்றுகூடல்கள்,நாடக அரங்கேற்றம்,நாட்டிய அரங்கேற்றம், கவியரங்குகள், இசைநிகழ்ச்சி,ஆக்கங்கள்,சிற்பக்கலை,சித்திரங்கள்,வீரக்கலைகள்,சாதித்தல்,வெற்றி பெறுதல் என்று இவை அனைத்தையும் செய்து அத்துடன் முறையான சமூக உறவுகளை வளர்த்து கூடிக் கதைத்து-பகிர்ந்து- நகைத்து-ஒழுக்கமான இல்லறத்தில் இன்புற்று-ஆரோக்கியமான உணவுகளை-பானங்களை உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்து இனம் தமிழினம். இங்கே புதியனவற்றைக் கற்றுக் கொள்ளுதல்- உடற்பயிற்சி-பல சுவைகளை உணருதல் - மகிழ்ச்சி உருவாக்குதல் அதை ஞாபகப்படுத்துதல் என்கின்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.இது பல பெரிய அளவிலான மாற்றங்களை மூளையில் ஏற்படுத்துகின்றது.இதை அண்மைக்கால மூளை பற்றிய புதிய ஆராய்ச்சிகள் அதனால் உணரப்பட்ட முடிவுகள் தெளிவாக காட்டி நிற்கின்றன.

இந்த செயற்பாடுகளின் ஒரு சிறிய பகுதியை விஞ்ஞான ரீதியாக நோக்கின்;

போதைவஸ்து பாவிக்கும் ஒருவரின் மூளையின் செயற்பாடுகள் அனைத்தையும் போதை வஸ்துக்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கின்றன. இதனால் அவர் மனிதனுக்கே உரித்தான உணர்ச்சிகள்,உணர்வுகளை மறந்து வெறொரு உலகத்துக்குள் அழைத்து செல்லப்படுகிறார்.

ஹெரோயின் இன் மூலப்பொருள் 

இதை ஓபியம் பாப்பி, பிறட்சீட் பாப்பி என அறியப்பட்ட செடியில் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விதைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே பல உணவுப் பொருட்களை இந்த விதைகள் மூலம் தயாரிக்கிறார்கள்.உ+ம், சிகாகோ ஸ்ரைல் ஹாட்டாக். இதன் பூவானது உலகந்தனை வசியம் செய்து கொண்டது என்றே சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓபியம் பாப்பி பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஒவ்வொரு பயிரின் அருகே சென்று அவை பூத்த அழகிய பூவின் இதழ்கள் விழுந்த நிலையில் காணப்படும்.இதன் இதழ்களை தாங்கும் (சீட்பொட் ) குண்டானழமான வெளிப்புறத்தில் சிறிய கீறல்களை இடுவார்கள். உடனே கீறலில் இருந்து பால் போன்ற திரவம் வெளியேறும். பின்னர் மறுநாள் சென்று அவற்றில் இருந்து வழிந்து காய்ந்த அந்த திரவத்தின் படிவை (பிசின் போன்ற படிவு ) ஒரு சிறிய சிப்பி போன்ற உபகரணத்தால் வழித்து சேர்ப்பார்கள். பின்னர் சேர்க்கப்பட்ட அந்த படிவு சட்டத்துக்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விற்பனைக்காக பல இடங்களுக்கு மாற்றப்படும்.இந்த செடிகளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா,ஈரான்,நைஜீரியா, மெக்சிகோ,எகிப்து ,கோல்டன் ராங்கிள் ( தாய்லாந்து-லாவோஸ்-மியன்மார் சந்திப்புப் பகுதி) போன்ற இடங்களில் பயிரிடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் ஓபியம் பாப்பி சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வரும் மொத்த உற்பத்தியில் 50 வீதமான உற்பத்தியை அவுஸ்திரேலியாவின் தெஸ்மேனியா செய்து வருகின்றது ஆக கருதப்பட்டது.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து பாப்பி பயிர்கள்

அகழ்வாராய்ச்சி ஒன்றின் போது, 5000 வருடங்களுக்கு முற்பட்ட ஒருவருடைய பற்களின் இடையில் பாப்பி விதைகள் கண்டுபிடிக்கப்பட்டது.வரலாற்றில் சுமேரியர்களே இவற்றை முதன் முறையில் பயன்படுத்தியதாக கருதுகின்றார்கள். மொசபத்தேமியாவில் இது பயிரிடப்பட்ட தாக கூறுகிறார்கள். இதை சுமேரியர்கள் இன்பப் பயிர் என கருதினார்கள். கிறிஸ்துவுக்கு முன் 1600 லிருந்து 1500 காலப்பகுதியில் எகிப்து நாட்டில் நயில் நதிப்பக்கம்மாக தீப்ஸ் நகர பகுதியில் இந்த பயிர் பயிரிடப்பட்டது என்று கூறுகிறார்கள் .இதைவிட இதே காலப்பகுதியில் கிரீசுக்கும் சைப்ரஸிற்கும் இந்த விதைகள் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது.கிமு 1532 - 1550ம் ஆண்டுகளில் உருவானதாக கருதப்படும் 110 பக்கம் உள்ள ஆவணம் ஒன்று (ஈபர்ஸ் பாப்பிரஸ் ) இது வலி கொல்லியாகவும் சுயத்தை தற்காலிகமாக இழக்க வைக்க மற்றும் நித்திரை சம்பந்தமான உளவியல் நோயை கையாள்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்ததை குறிக்கிறது. அதைவிட அரேபிய மருத்துவர்களும் பொது வலி கொல்லியாக பயன்படுத் தியிருக்கிறார்கள். மேற்கத்திய மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்டீஸ் இதன் அதீத செயற்பாட்டை நிராகரித்திருக்கிறார்.ஆனால் சில சந்தர்ப்பங்களில் மட்டும் மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதை ஆமோதித்ததாகவே தெரிகிறது. கிறிஸ்துவுக்கு முன் 330 ஆம் ஆண்டு அலெக்சாந்தரினால் முதன்முறையாக இந்தியாவுக்கு இப்பயிர் எடுத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.இவ்வாறு கிறிஸ்துவுக்கு முன்னரே இதன் பரம்பல் காணப்பட்டு வந்தது.ஆனால் ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பழமை வாய்ந்த சீன மருத்துவத்தில் இது இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இப்பயிர் பல்வேறு ராஜ்ஜியங்களையும் நாடுகளையும் அதிரப்பண்ணி வல்லரசு நாடுகளுக்கிடையில் போர்களை உருவாக்கி (முதல் ஓபியம் போர் - ஆங்கில-சீன போர் 1839 - 1842- ஆங்கிலோ-சீனோ போர்/இரண்டாம் சீனப் போர்/அம்புப் போர் 1856 -1860 ) அத்துடன் அமெரிக்காவில் ஓபியாய்டு பரம்பல் கட்டுக்கடங்காமை ( ஓபியாய்டு இபடமிக்க்-OPioid Epidemic) முதலாவது அலை(2000) இரண்டாவது அலை(2010) மூன்றாவது அலை (2013) என்று தாக்கி அழித்திருக்கிறது.சிலர் 2021 நான்காவது அலை என்றும் கூறியிருந்தார்கள். ஓபியாய்டு என்பவர் எமக்கு புதியவராக கருதப்பட்டாலும் உலகத்துக்கு மிகப்பழையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் முதல் தயாரிப்பு

இதை ஜேர்மனியை சார்ந்த தற்போதும் மிகவும் பிரபல்யமான மருந்து உற்பத்தி நிறுவனமான டீயலநச வலி நீக்கியாக வர்த்தக ரீதியாக முதல் முறையாக ஆரம்பித்தது .மார்பின் அல்லது கோடீன் என இதற்கு முன்னரே காணப்பட்ட மருந்துகளையும் விட வினைத்திறன் உடையதாக,மேம்பட்டதாக, பாதுகாப்பானதாகவும் இதனை அவர்கள் கருதினார். ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. மாறாக மிகவும் அதிக அடிமையாக்கும் தன்மை அவ தானிக்கப்பட்டது.முதல் தயாரிப்பில் இருந்து ஒரு வருடத்தில் 23 நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஹெரோயின் இற்கு அடிமை ஆனவர்கள் சடுதியாக அதிகரித்த காரணத்தினால், 1913 இல் பல நாடுகள் அதைத் தடை செய்யத் தொடங்கின.


எவ்வாறான சூழலில் அல்லது சந்தர்ப்பத்தில் போதைவஸ்து பழக்கத்தில் சிக்குகிறார்கள் ?

இயற்கை அனர்த்த பாதிப்பு,யுத்த அனர்த்த பாதிப்பு, சடுதியாக உறவுகளை இழக்கும் போது, பாலியல் ரீதியான வன்புணர்வில் ஏற்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத வெறுப்புணர்வை சமாளிக்க, தோல்விகளில் இருந்து அதன் வலியில் இருந்து தப்பிக்க, திருமண முறிவு, அல்லது யாரும் தன்னை அன்பு செய்யவில்லை, எனக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்று சிந்திக்கும் இடத்து, சமூகத்தினாலோ அல்லது சந்தர்ப்பத்தினாலோ தனிமைப்படுத்தப்படும் போது இந்த சந்தர்ப்பத்தில் இதிலிருந்து தற்காலிகமாக தப்பலாம் என இவரால் அனுமானிக்கப்படுவதனால் அல்லது இன்னொருவரால் வஞ்சிக்கப்படுவத னால் இந்த போதைவஸ்து நுழைகிறது அல்லது நுழைக்கப்படுகிறது.இலங்கை போன்ற இதைப் பற்றி தெரியாத நாடுகளில் இதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனும் சிலர் உள்ளே நுழைந்து பின் வெளியே வர முடியாமல் நிதந்தரமாக சிக்கிக் கொள்கின்றனர்.

இவற்றைவிட என்பு முறிவுகள் அல்லது பாரதூரமான சத்திர சிகிச்சைகளின் பின் ஏற்படும் வலியை தவிர்த்துக் கொள்வதற்கு இவற்றை பாவித்தவர்கள், வலி பல காலம் நீடிக்க இவற்றை தொடர்ந்து பாவித்து பின்னர் பலகாலம் குறிப்பிட்ட வலியால் ஏற்பட்ட வெறுக்கத்தக்க தன்மையில் ஏற்பட்ட வெறுப்புணர்வு மற்றும் வலியின் கொடூரம் காரணமாக தொடர்ந்தும் இதை பாவித்து அதற்கு அடிமையாதல் என அடிமையாவதற்கான காரணங்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்த வலி கொல்லிகள் எவ்வாறு மூளையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன

உதாரணமாக ஒருவர் மழை காலத்தில் தெருவில் நடந்து செல்கிறார். அவர் துரதிஸ்டவசமாக கல்லில் அடிபட்டு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து கை முறிகின்றது.அவர் நரம்புகளில் உள்ள நியூரான்கள் இந்த செய்தியை முள்ளந்தண்டு ஊடாக மூளைக்கு கடத்துகிறது.இந்த வலி உணர்வை மூளை உணர்கிறது.இதை தடுக்க உடலில் உள்ள இயற்கையான வலி கொல்லும் அமைப்பு எண்டோர்பின்களை அனுப்ப அவை நியூரான்களிலுள்ள ஓபியாய்டு ஏற்பிகளில் ஒட்டிக்கொள்கிறது.எனவே வலி சார்ந்த சமிக்ஞைகள் கடத்தப்படுவது குறைந்து செல்கின்றது.ஆகையால் வலி குறைவது போல உணரப்படுகிறது.

வலியைக் குறைப்பதற்கு இதே வேலையை செய்ய வெளியிலிருந்து ஓபியாய்டு மருந்துகள் கொடுக்கப்படும்.இவை உண்மையிலே உடலில் காணப்படும் வலி கொல்லும் தன்மையை விட மிகமிக வலிமை வாய்ந்தவை ஆகும்.இங்கே இரண்டு செயற்பாடு நடக்கிறது. இது வலி நீக்கும் வேலையுடன் நின்று விடாது
மூளையுடைய றிவாடிங் சிஸ்ரம் இல் இன்ப உணர்வை உருவாக்கும்.இந்த நினைவுகளை ஹிப்போகாம்பஸ் எனும் மூளையின் பகுதியில்
சேமித்தும் வைக்கப்படுகிறது.

போதைக்கு அடிமையாகிய காலத்தில் எவ்வாறான பிரச்சினையை
எதிர்கொள்கிறார்கள்?

இவர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். காலப்போக்கில் நடுத்தர வர்க்கத்தினர் சந்தையில் எப்போதும் அதிக விலையில் உள்ளதான இந்த போதைப்பொருட்களை வாங்க முடியாது போகையில் தம்முடைய உடைமைகளை குறைந்த விலைக்கு விற் கிறார்கள்,சிலர் திருட்டில் ஈடுபட்டு இவற்றை வாங்க தொடங்குகிறார்கள், சிலர் தங்களுக்கு தெரிந்தவர்கள்-உறவினர்கள் உடைய பொருட்களை ரகசியமாக திருடி விற்று அதன்மூலம் வாங்குகிறார்கள்.சில நாடுகளில் பெற்றோர்களிடம் இதற்காக பணத்தை கேட்க முடியாது.எனவே பெண்கள் இவற்றை வாங்குவதற்காக மட்டும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் வினைத்திறன் வெகுவாக குறைந்து போக வேலை செய்யும் இடங்களில் அல்லது வேலைகளை இழக்க நேரிடுகிறது. மாணவர்கள் பாடசாலைகளில் வழக்கம் போல செயல்பட முடியாமல் கல்வியில் பின்னடைவை சந்திக்கிறார்கள்.அத்தோடு கூட தங்களுடைய பழக்கத்தை யாரும் அறிந்து விடுவார்களோ !என்ற அச்சம் இவர்களை அனுதினமும் தாக்கி ஒரு பதற்றமான நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகிறார்கள்.
அத்தோடு தங்கள் விருப்பத்துக்கு, அன்புக்கு உரியவர்களை விட்டு போதைவஸ்து சார்ந்தவர்களுடன் சேர தொடங்குவது இவர்களுடைய வழக்கமான உறவு முறைகளை பொதுவாக திருமண உறவு போன்றவற்றை
முறித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறது.

சில நாடுகளில் சுகாதாரமற்ற ஊசிகளை பயன்படுத்துவதனால் இவர்களுக்கு இருதய வால்வுகளில் பக்டீரியாக்கள் படிந்து பின்னர் சத்திர சிகிச்சை மூலம் செயற்கையான வால்வுகள் மாற்றப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

போதைவஸ்து பாவிப்பவர்களை எவ்வாறு இனங்காண்பது ?

தங்களை தனிமைப்படுத்த தொடங்குவார்கள், புதிய நண்பர்களுடன் சேர தொடங்குவார்கள்,பழைய உறவுகளை தவிர்த்துக்கொள்ள தொடங்குவார்கள், சுத்தமாக இருத்தல் குறைய தொடங்கும், மஞ்சள் பற்கள்,அழுக்கான ஆடை
என்பன தோன்ற தொடங்கும்.இவர்கள் முழுக் கவனமும் அடுத்த தடவை போதைவஸ்து பாவிப்பதற்கான ஆயுதத்தை செய்வதிலேயே இருக்கும். இவர்கள் மெலிய தொடங்குவார்கள்.ஏனெனில் இவர்கள் உணவுக்காக செலவிடும் பணத்தை போதைக்கு செலவிட தொடங்குவார்கள். இவர்களுடைய இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும்.போதை நன்றாக பாவிக்கும் ஒருவரை பக்கத்தில் உள்ள ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுக்கச் சொன்னால் அவர் மிக மெதுவாக இயங்கியே அதை எடுப்பார். ஆனால் அவருடைய மூளைக்குள் அவர் வழக்கமான வேகத்துடன் செயற்படுவதாக உணர்வார். ஓபியாய்டு மருந்துகள் பாவிப்பவர்களுக்கு கண்மணியின் துழை மிகச் சிறுத்து காணப்படும். எது எவ்வாறாக இருந்தாலும் 6 தொடங்கி 8 மணி நேரம்
மட்டுமே ஓபியாய்டு மருந்துகள் செயல்படும்.எனவே இவர்களை எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலம் இவர்களில் மீளப்பெறும் அறிகுறிகளை காண முடியும். அவையாவன; கவலை, நடுக்கம், கொட்டாவி, உடல்வலி, வியர்வை, தும்மல்,மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், வாந்தி, இதயத் துடிப்பு அதிகரிப்பு, இரத்த அழுத்த அதிகரிப்பு.
சிலர் மீளப்பெறும் அறிகுறிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் கைகளை கூரிய பிளேட்களினால் கீறிக்கொள்வர்.இதன் காயங்களை நீங்கள் கண்டறியலாம். அதோடு அவர் ஊசி மூலம் போதைவஸ்து ஏற்றுபவர் ஆயின் உங்கள் வீட்டு சுற்றாடலில் ஊசிகள், கண்ணாடி குழாய்கள் போன்றவற்றை காணலாம்.அத்தோடு உடலில் ஊசி ஏற்றப்பட்ட அடையாளங்களை கண்டு கொள்ளலாம்.
அவர் போதைவஸ்து புகைப்பவர் ஆயின் சுருட்டப்பட்ட கடதாசிகள், மின்மினி பேப்பர்கள், மெழுகுவர்த்திகள் போன்றவற்றை காணலாம். இவற்றின் மூலம் இவர்கள் போதைவஸ்து பாவிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர வேண்டும்.

போதைவஸ்து பழக்கத்தில் சிக்கியவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியில் வரமுடியாமல் இருக்க காரணம் என்ன?

இவர்களை குற்றவாளிகளாக பார்க்காமல் நோயாளிகளாக ( substance use disorder)
பார்க்க வேண்டும் என்பதே பொதுவாக மருத்துவர்களின் கூற்று.பொதுவில் போதை பழக்கம் ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டியதும் அது உளவியல் நோயின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் உளவியல் மருத்துவர்கள் தான் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற இந்த செய்தி பலரை போதைவஸ்து பாவனையில் கால் வைப்பதில் இருந்து தடுக்கும்.ஏனென்றால் இது அவர்களுடைய சமூக அந்தஸ்தை பாதிக்கும் என்பதினால் ஆகும் .

போதைக்கு அடிமையானவர்கள் இரண்டு  வழியாக பலவந்தமாக மீண்டும் மீண்டும் அமிழ்த்தப்படுகிறார்கள் அல்லது இதற்கு அடிமையாக்க ப்படுகிறார்கள் அல்லது வெளியில் வர முடியாமல் சிக்கி இருக்கிறார்கள் .இது எவ்வாறு என்று பார்ப்போம் .

பொதுவாக ஏதோ ஒரு காரணத்துக்காகவே இவர்கள் முதலில் இதற்குள் நுழைந்து இருப்பார்கள்.எனவே இதை பாவிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்துக்கு நுழைந்த காரணத்தில்இருந்து விடுபடலாம்.இது இன்பமூட்டும் என்பதை இவர்களுடைய மூளை இவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்( நேர்மறை வலுவூட்டல் ). இரண்டாவதாக இன்னொரு புறத்தில் மீளப்பெறும் அறிகுறிகள் (வித்றோவல் சிம்ரம்ஸ்) என அழைக்கப்படும் மிகக்கொடூரமான உணர்வு இவர்களை தாக்கிக் கொண்டு இருக்கும்.இது சாதாரண காய்ச்சல் உள்ள வலியைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமானது என்றே கூறுகிறார்கள் இதனால் மீளப்பெறும் அறிகுறிகள் இல் இருந்து விடுபட வேண்டும்.எனில் போதைவஸ்து பாவிக்க வேண்டும் என்று இவருடைய மூளை இவருக்கு கூறும்(எதிர்மறை வலுவூட்டல் ). எனவே வேறு வழியில்லாமல் மீண்டும் மீண்டும் பாவிக்கிறார்கள்.

இவருக்கு குறிப்பிட்ட ழிழைனைள பழக்கப்பட்டுப் போக ( OPioid Receptors எண் ணிக்கையை குறைத்தல் உட்பட பல வழிகளில் உடல் இயைபாக்கம் அடைகிறது ) முன்னையது போல் உணர்ந்துகொள்ள அதிக அளவில் போதை வஸ்துக்களை பாவிக்க தொடங்குவார்கள்.வெவ்வேறு போதைவஸ்துக்கள் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக அதிக அளவு ஹெரோயின் பாவனை சுவாசத்தின் அளவு குறைதல், இருதய துடிப்புகுறைதல் என்பனவற்றை ஏற்படுத்தி மரணத்தை தோற்றுவிக்கும்.

போதைவஸ்து பாவனையில் இருந்து விடுபடலாம் என கூறும் சில ஆராய்ச்சி முடிவுகளையும் சில வரலாற்று சம்பவங்களையும் பார்ப்போம்.

எலிகள் மற்றும் மனிதர்களில் ஆராய்ச்சி

கனேடிய உளவியலாளர் Bruce K. Alexan-der சில பரிசோதனைகளை செய்கிறார் இவர்தனிமைப்படுத்தப்பட்ட எலி கூடு எடுத்து அதில் ஒருபுறத்தில் சாதாரண தண்ணீரையும் மறுபுறத்தில் போதைவஸ்து கலக்கப்பட்ட தண்ணீரையும் வைத்தார்.அதற்குள் எலியை விட்டார். எலி போதைவஸ்து கலக்கப்பட்ட தண்ணீரை அனுதினமும் பருகியது.பின்னர் இவர் இவ்வாறு ஒரு பரிசோதனை செய்தார்.
எலிகளுக்கு தேவையான சகல வசதிகளுடன் எலிகள் விரும்பி உண்ணும் உணவுகளுடன் பல எலிகளை அதற்குள் விட்டார். எலி வளைகள் உடன் ஒரு பிரதேசத்தை இவ்வாறு உருவாக்கினார் ( எலிப் பூங்கா ) .எலிகள் இப்போது தனிமையாக இல்லை. அவர்களுக்கு தேவையான பல விடயங்கள் அவர்களிடம் உள்ளன. முன்னர்போல அங்கே சாதாரண தண்ணீரையும் போதைவஸ்து கலக்கப்பட்ட தண்ணீரையும் வைத்தார்.அப்போது எலிகள் போதைவஸ்து கலக்கப்பட்ட தண்ணீரை கண்டு கொள்ளவில்லை.

பெண்டகன் இன் ஆய்வின்படி வியட்நாம் யுத்தத்தில் 20 வீதமான அமெரிக்க வீரர்கள் ஹெரோயின் பாவனைக்கு உட்பட்டு இருந்தார்கள் . ஆனால் அவர்கள் நாட்டுக்கு திரும்பியபோது 95 வீதமானவர்கள் அந்த பாவனையை நிறுத்தி விட்டார்கள்.அவர்கள் இந்த பாவனையில் இருந்து நீங்க எந்த நிலையத்துக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதைவஸ்துக்கு அடிமையானவர்களை வெளியே கொண்டுவர செய்ய
வேண்டிய நடவடிக்கைகள்.

முதலில் இவரை உரிய மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். அங்கே பல
வகைப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.

டீரொக்சிங் அல்லது போதை மருந்துடன் உடல் இணைந்து மருந்து இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமையில் இருந்து விடுவித்தல் என்பதை பல வழிகளில் மேற்கொள்கிறார்கள்.இவற்றில் மிகவும் சுவாரசியமான சிகிச்சை முறைகளும் உள்ளடங்குகின்றன. ஒன்று இரண்டு அல்ல பல சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.இவற்றில் ஒவ்வொரு நாளும் சென்று தனக்கு உரிய சிகிச்சையை பெறக்கூடியவர்களுக்கு ஒருவிதமானதும் அதிகமான வேலைப்பளுவும் கடமைகளும் உடையவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் ஏற்றப்படும் மருந்துகள் என்று பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.சில மருந்துகள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று பாவிக்க கூடியவையாகவுயும் உள்ளன.இவ்வாறு அவரவருடைய சமூக கடமைகள் பொறுப்புகளுக்கு ஏற்ப பல மருத்துவ சிகிச்சைகள் காணப்படுகின்றன.

போதைக்கு செல்லும் தன்மையை (Craving) நீக்கி விட்டாலும் அதன் பின்னர் இவர் ஏன் போதைவஸ்துக்கு அடிமையாக சென்றார்? என்னென்ன காரணங்களுக்காக அந்தப் பாதையை தெரிந்து இருக்கிறார்கள் என்பதை மிகக் கவனமாக ஆராய வேண்டும்.அதற்காக தேவைப்படின் சிலரை மறுவாழ்வு மையம் அனுப்புவார்கள். இவருக்கு உரிய சூழலை உருவாக்கி அவரை மனதளவில் முற்றாக வெளியில் கொண்டுவர இவருக்கு அன்புக்கு உரியவர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.ஆனாலும் இவர் மனதளவில் எப்போது இது போதும், இதனால் பட்ட துன்பம் போதும் என நினைக்கிறாரோ அப்போதுதான் இவர்களுடைய மருந்தும் மறுவாழ்வு சிகிச்சையும் உண்மையில் பலனளிக்கும் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.






Post a Comment

Previous Post Next Post