.

முன்னொரு காலத்தில் ஒரு அரசருக்குச் சொந்தமான மாளிகை வளாகத்தில் யானை ஒன்று வசித்து வந்தது. அரசருடன் மிக மிக நெருங்கிய உறவு கொண்ட யானை, மிகவும் கவனமுடன் உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.

அந்த மாளிகையின் அருகே நாய் ஒன்று வசித்து வந்தது. அது மிகவும் பலவீனமாகவும் எலும்பும் தோலுமாய் காணப்பட்டது.ஆயினும் அரண்ம னையிலிருந்து யானைக் காக செய்யப்படும் இனிப்பு சாதத்தின் மனம் அதனை மிகவும் ஈர்த்தது.

ஒருநாள் அந்த நாயினால் அரண்மனையிலிருந்து வெளிவரும் சாதத்தின் மனம் மிகவும் ஈர்க்கவே, அதனால் தடுக்க முடியாத ஆவலுடன் மெல்ல யானை வசிக்கும் கொட்டாரத்தில் நுழைந்தது.

தட்டு தட்டாய் சாதக் கவளங்களைக் கண்ட நாயோ, மெல்ல நகர்ந்து ஒரு கவளத்தை கவ்வி ருசி பார்க்கத் தொடங்கியது. யானை வேறு பக்கமாய் திரும்பியபடி உயர்ந்த வகை இனிப்பு சாதத்தின் கவளங்களை சுவைத்தபடி இருந்ததால், பல நாட்கள் இதை யானையும் கவனிக்கவே இல்லை.

ராஜ வம்சத்தின் உணவானபடியால் நாய் நன்கு கொழுத்து வளரத் தொடங்கியது. ஒருநாள் இது யானையின் கவனத்திற்கு எட்டியது.யானையும் நாயினுடைய வருகையையும் உறவையும் விரும்பி நட்புடன் தினமும் ஒன்றாய் உணவருந்தத் தொடங்கியது. நண்பர்கள் இருவரும் ஒன்றாக பொழுதைக் கழித்தனர்.ஒன்றாய் உணவுண்டு, உறங்கி எழுந்தனர்.விளையாடவும் செய்தார்கள். ஒருவருக்கொருவர் பிரியாமல் மகிழ்வுடன் இருந்தனர். மிகவும் நெருங்கிய நண்பர்களாகி ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருந்து வந்தார்கள்.

ஒருநாள் ஒரு வழிப்போக்கன் இவர்கள் இருவரையும் ஒன்றாய் கண்டான். யானைப்பாகனிடம் வழிப்போக்கன், இந்த கொழுத்த நாய் எனக்கு வேண்டும், என்ன விலை இது? யானைப் பாகன், தனக்குச் சொந்தமில்லாத நாயை நல்ல விலைக்கு விற்று விட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டான்.

அவன் தன் இருப்பிடத்திற்கு அந்த நாயை கொண்டுசென்றான். அவன் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தது.

அரண்மனை யானை இந்த நிகழ்ச்சிக்குபிறகு துக்கம் அடைந்தது.

தனது உயிர் நண்பனான நாயைப் பிரிந்த துக்கத்தில் வெறுப்புற்று உண்ணவும் குடிக்கவும் குளிக்கவும் மறுத்துக் கிடந்தது.

இறுதியாக இதனைக் கண்ட யானைப்பாகன், அரசருக்கு தகவல் தெரிவி த்தான்.ஆனால் நாயைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. விலங்குகளைப் பற்றி நன்கு அறிந்த மதியூகியான தனது அமைச்சரை அழைத்தான் அரசன்.

மந்திரி அவர்களே, யானை கொட்டடிக்குச் சென்று யானையின் நிலைமையை ஆராய்ந்து என்னிடம் கூறும்.

யானை மிகவும் கவலையுடன் கொட்டடியில் இருப்பதைக் கண்டார் மதியூ கியான அமைச்சர். யானையை உற்று நோக்கியபடி யானைப் பாகனிடம் மந்திரி, யானையின் உடம்பில் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. பின் ஏன் இத்தனை சோர்வாக வாட்டத்துடன் காணப்படுகின்றது. யாரையோ பிரிந்த ஏக்கத்தில் மிகவும் மனவாட்டத்துடன் காணப்படுகின்றது. இந்த யானை யாரோடு நெருங்கிப் பழகியது என்று தெரியுமா?



யானைப் பாகன்: இங்கு நாய் ஒன்று நம் யானையுடன் உண்டு உறங்கி விளையாடி வருவது உண்டு. அதை ஒரு வழிப்போக்கன் சில நாட்களுக்கு முன் கொண்டுசென்றான்.

மந்திரி: எங்கே அந்த நாய்?

யானைப் பாகன்: எனக்குத் தெரியாது.

மந்திரி: அரசே எனது கருத்துப்படி நமது அரண்மனை யானை ஒரு நாயின் பிரிவினால் தான் வருத்தமாய் இருக்கின்றது.

மன்னன்: எங்கே இருக்கின்றது அந்த நாய்?

மந்திரி: யாரோ வழிப்போக்கன் கொண்டு சென்றதாக யானைப் பாகன் சொன்னான்.போன இடம் தெரியவில்லை.

மன்னன்: எப்படி அதை அழைத்துவந்து எமது யானையை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள் சொல்லுங்கள்.

மந்திரி: அரசே நாயை சிறைப் பிடித்தவர் யாராயினும் அரச தண்டனையை அனுபவிக்க நேரும் என்று ஆணையிடுங்கள்.

முரசு அறிவிப்பவன்: கேளுங்கள் கவனமாய்.. எல்லோரும் கவனமாய்க் கேளுங்கள்.நாயை வைத்திருப்பவர் யாராயினும் அவர்கள் அரசரின் தண்டனைக்கு உள்ளாவீர்கள். இது அரசரின் ஆணை.

அரசரின் ஆணையைக் கேட்டதும் நாயை வாங்கியவன் மெல்ல அதனை கட்டிய கயிறுகளை அவிழ்த்துவிட்டான். கட்டுகளில் இருந்து விடுபட்ட நாய் பாய்ந்து ஓடி யானையின் கொட்டடிக்குள் சென்றது.

நாயைக் கண்ட யானை மகிழ்ச்சியுடன் தனது தும்பிக்கையால் கட்டியணைத்து அதனைத் தூக்கி தனது மேல் இருக்கும் படி செய்தது.

நாயின் வாலாட்டத்தைக் கண்ட யானையின் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது.யானையின் மகிழ்ச்சியைக் கண்ட அரசனும் திருப்தி யடைந்தான். மந்திரியின் மதியூகமான செயலைப் பாராட்டி பரிசளித்தான். யானையும் நாயும் எப்போதும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தன.

நட்பைப் போல் ஓர் உயர்ந்த உறவு இந்த உலகத்திலே இல்லை, உண்மையான நண்பர்கள் என்றும் பிரிவதில்லை, இந்தக் கதையின் நீதி என்னவென்றால் உற்ற நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அப்படியே நிகழ்ந்தாலும் அவர்கள் மீண்டும் இணைவது உறுதி.ஏனென்றால் நண்பர்களைப் பிரிந்து இருக்க முடியாதல்லவா


எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.

  1. பறவை ஒரு குட்டிக் கதை
  2. குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
  3. அமைதி - ஒரு குட்டிக்கதை
  4. வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
  5.  கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
  6. இரண்டு மரம்-குட்டிக்கதை
  7. கடவுள் ஒரு குட்டிக்கதை
  8. கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
  9. ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
  10. ஞானம் ஒரு குட்டிக் கதை
  11. எண்ணமே வாழ்க்கை-குட்டிக்கதை
  12. முரட்டுக்குதிரை-குட்டிக்கதை
  13. யார் அழகு..?
  14. ஒற்றுமையே பலம்
  15. கொக்கிற்கு எத்தனை கால்..?
  16. அதிசய மோதிரம்-குட்டிக் கதை
  17. பரிசும் ஊக்கமும்-குட்டிக் கதை
  18. தர்மம் தலை காக்கும்
  19. உழைப்பும் சோம்பலும்-குட்டிக் கதை
  20. புத்தியில்லாதவர்களின் வேலை-குட்டிக் கதை
  21. பூதம் சொன்ன கதை-குட்டிக் கதை
  22. மந்திரப் புல்லாங்குழல்-குட்டிக் கதை
  23. பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா....?-குட்டிக்கதை
  24. ஏழை நாடோடி-குட்டிக் கதை
  25. வென்றது யார்..?-குட்டிக் கதை

2 Comments

  1. குழந்தைகளுக்கு சொல்வதற்கு ஏற்ற தாய் இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post