.

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார்.அவர் கையில் கொக்கொன்று இருந்தது.தன் கையிலிருந்த கொக்கை சமையல்காரனிடம் கொடுத்தார்.

இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள் என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான்.கறிக்குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவள் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்.....

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலை கொண்டுவர முடியும்? என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி. ம்ம்ம்... நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா,இரண்டு காலா என்று தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்சினையை அதோடு விட்டுவிட்டார்.



மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக்கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல், என்று கேட்டார் முதலாளி,

ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி, என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தைப் பார்த்து ச்சூ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்றுகொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவி பின் பறந்து சென்றன.

இப்பொழுது என்ன சொல்கிறாய்?

கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் ச்சூ.. என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே! என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், இனி இப்படி நடந்து கொள்ளாதே. பொய் சொல்வது. ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடு என்றார் முதலாளி. என்னை மன்னிச்சிடுங்க முதலாளி. இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என்றான் சமையல்காரன்.



எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.

  1. பறவை ஒரு குட்டிக் கதை
  2. குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
  3. அமைதி - ஒரு குட்டிக்கதை
  4. வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
  5.  கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
  6. இரண்டு மரம்-குட்டிக்கதை
  7. கடவுள் ஒரு குட்டிக்கதை
  8. கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
  9. ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
  10. ஞானம் ஒரு குட்டிக் கதை
  11. எண்ணமே வாழ்க்கை-குட்டிக்கதை
  12. முரட்டுக்குதிரை-குட்டிக்கதை
  13. யார் அழகு..?
  14. ஒற்றுமையே பலம்

Post a Comment

Previous Post Next Post